சீமான் அண்ணா எலூச்சி
💪
வாழ்க்கை
சீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கைமாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன், அன்னம்மாள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[சான்று தேவை]முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் செளத்திரி நகரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதியிடம் அளித்த புகாரில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தம்மை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். அவருடைய மனுவில் சீமானுடன் பாலியல் உறவு குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளன. இந்த புகாரை பற்றி வளசரவாக்கம் காவல்துறை ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் காவல்துறையினர் நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், நம்பிக்கை மோசடி, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் சீமானுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் உண்மை உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், ஏனென்றால் விஜயலட்சுமி தன்னை சீமான் காதலித்ததாகவும், நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படும் காலக்கட்டத்தில் சீமான் இலங்கை தமிழர்களுக்காக கடுமையான போராட்டக் களத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.[சான்று தேவை]